சில தினங்கள் முன்பு, காந்தியார் போல் இருவர் உதவியுடன் நடந்தேன் என்று கமல் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவே, சில நாட்களுக்கு முன்பு அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவர் தன்னுயை டிவிட்டர் பக்கத்தில் “நவம்பர் மாதத்திலிருந்து நான் என்னுடைய வேலையை தொடங்கலாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். எல்லோருடைய அன்பாலும் விரைவில் குணமடைந்துவிட்டேன். எல்லோருக்கும் நன்றி. சபாஷ் நாயுடு திரைப்படம் மூலம் அந்த அன்பை திருப்பித் தருவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.