கடந்த மாதம் 24ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி ராம்குமாரை கைது செய்ய முற்பட்ட போது தற்கொலைக்கு முயன்றதால், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததால் அவரிடம் விசாரணை தொடங்கியது. ராம்குமாரிடம் காவல்துறையினர் வாக்கு மூலம் பெற்றனர். அதில் ராம்குமார் இவ்வாறு கூறியுள்ளார்,
சுவாதிக்கு அதிக நண்பர்கள் இருக்கின்றனர். அது எனக்கு பிடிக்கவில்லை. சுவாதி என்னுடன் மட்டுமே பேச வேண்டும் என நினைத்தேன்.தொடர்ந்து நான் அவருக்கு கொடுத்த தொந்தரவு காரணமாக சுவாதி தனது அப்பாவின் துணையுடன் ரயில் நிலையத்திற்கு சென்று வந்தார்.பின்னர் இரு முறை ரயில் நிலையத்தில் சந்தித்து பேசினேன். அப்போது அவர் என்னை தேவாங்கு போல் இருப்பதாக தெரிவித்தார்.அப்போதே அவரது வாயினை கிழிக்க வேண்டும் என எனக்கு கோபம் வந்தது. எனினும் சுவாதி மேல் நான் கொண்ட காதலால் திரும்பி வந்துவிட்டேன்.