முதலமைச்சர் ஜெயலலிதாவை காண இன்று திருமாவளவன் அவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் 2வது மாடிக்கு சென்றார். ஆனால், ஜெயலலிதாவை நேரில் சந்திக்காமல், அங்கிருந்த அதிமுக தலைவர்களை மட்டும் சந்தித்துவிட்டு திரும்பினார்.
பின்னர் செய்தியாளர்களிடன் பேசிய திருமாவளவன், ”முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி பல்வேறு தகவல்கள் வதந்தியாக பரவியுள்ளது. எனவே அவர் உடல்நிலை பற்றி அரசு சார்பில் அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே நான் கோரிக்கை விடுத்திருந்தேன்.
முதலமைச்சர் ஜெயலலிதா நன்றாக குணமடைந்து வருவதாகவும், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்றும் அதிமுக மூத்த தலைவர்கள் என்னிடம் உறுதிபட தெரிவித்தனர். அவர் விரைவில் குணமடைய விடுதலை சிறுத்தைகள் சார்பில் மீண்டும் வாழ்த்துகிறேன். நான் இங்கு வந்ததில் வேறு எந்த குறிக்கோளும் இல்லை” என்றார்.