தமிழகத்தில் 6 ஆம் தேதி வரை வறண்ட வானிலை!

புதன், 2 பிப்ரவரி 2022 (15:25 IST)
இன்று தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தகவல். 

 
தென் கேரளாவிலிருந்து வட உள் கர்நாடகா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக நேற்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
 
இந்நிலையில் இன்று தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், பனி மூட்டமாகவும் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்