வீட்டு பிள்ளையாரை கோவில்களில் வைக்கலாம்! – அறநிலையத்துறை அனுமதி

வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (13:59 IST)
வீடுகளில் வைத்து வழிபடும் பிள்ளையாரை கோவில்களில் வைக்க அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.

இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்தில் கொரோனா காரணமாக பொது இடங்களில் சிலை வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் வீடுகளில் சிறிய சிலைகளை வாங்கி வைத்து வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீட்டில் வைத்து வழிபடும் சிலைகளை வழக்கமாக கோவிலில் மக்கள் வைப்பது வழக்கம். இந்நிலையில் கோவிலில் வீட்டு பிள்ளையாரை வைக்க இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. சிலைகளை பாதுகாப்பாக வைக்க தனி அலுவலர் ஒருவரும் நியமிக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்