காரணம், அந்த கடிதத்தில், சென்னையில் உள்ள 2 தலைவர்கள் மற்றும் கோவையில் உள்ள 2 தலைவர்களை விரைவில் கொலை செய்வோம் என எழுதப்பட்டு இருந்தது. இந்த கடிதம் அனுப்பிய நபர் பெயர் மற்றும் முகவரி ஏதும் அதில் தெரிவிக்கப்படவில்லை.
இதனையடுத்து, இந்த கடிதம் குறித்து, சென்னை மாநகர இந்து முன்னணி செயலாளர் முருகேசன், சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.