500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, அவற்றை வங்கிகளில் செலுத்தி புதிய 500, 2000 நோட்டுகளாக மாற்றலாம என இந்திய பிரதமர் மோடி நேற்று இரவு அறிவித்தார். கருப்பு பணத்தை மீட்பதற்கும், கள்ள பணத்தை தடுக்கவும் அரசு எடுத்திருக்கும் அதிரடி நடவடிக்கை என கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் குழம்பிவிட்டார்கள். கையில் இருக்கும் 500, 1000 நோட்டுகளை என்ன செய்வது, நாளைய தேவைக்கு வேறு பணம் இல்லையே குடும்பத்தின் தேவைகளை எப்படி சமாளிப்பது என விழிபிதுங்கி போனார்கள் மக்கள்.