8 மாவட்டங்களுக்கு காத்திருக்கு செம மழை! – வானிலை ஆய்வு மையம்!

ஞாயிறு, 19 ஜூலை 2020 (13:35 IST)
தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட சில பகுதிகள் மழை பெய்து வரும் நிலையில் மேலும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முதல் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்துள்ளது.

இந்நிலையில் அடுத்த 24 மனி நேரத்தில் தமிழக கடற்கரையோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நீலகிரி, வேலூர், கோயம்புத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டம்ங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்