திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும்.. சென்னை வானிலை ஆய்வு மையம்

புதன், 23 நவம்பர் 2022 (13:32 IST)
இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தகவல் தெரிவித்துள்ளது.
 
தென்கிழக்கு வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் வரும் 27-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்றும் குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இதனை அடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்