தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது: ராமதாஸ்

வெள்ளி, 13 மே 2016 (19:56 IST)
தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது பாட்டாளி மக்கள் கட்சி. இந்நிலையில் சேலத்தில் பாமக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமகவின் நிறுவன தலைவர் ராமதாஸ் தமிழ் நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்றார்.


 
 
அதிமுக, பணத்தை மட்டுமே நம்பி, இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகின்றது. இலவசங்களை கொடுத்து, மக்களை பிச்சைகாரர்களாக்கி, 50 ஆண்டுகளாக தமிழகத்தை திராவிட கட்சிகள் ஆண்டு வருகின்றனர்.
 
விவசாயம் அழிந்து வருவதும், மின்வெட்டால் சிறுகுறு தொழிற்சாலைகள் முடங்கி வருவதும், மக்களிடம் பணப்புழக்கம் இல்லாதது போன்றவை, திராவிட கட்சிகளின் சாதனைகளாக உள்ளது.
 
எனவே திமுக, அதிமுக கட்சிகளை ஆட்சியில் அமர்த்தினால், ரஜினிகாந்த் சொன்னதை போல, தமிழக மக்களை ஆண்டவனால் கூட காப்பற்ற முடியாது என சேலம் தேர்தல் பிரச்சாரத்தில் ராமதாஸ் பேசினார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்