இந்த கூட்டத்தில் மூத்த துணை தலைவர்கள் ஞானதேசிகன், வேலூர் ஞானசேகரன், கோவை தங்கம் உள்ளிட்ட முன்னாள் எம்பிக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தேர்தலில் தமாகா தோல்விக்கான காரணம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, பேசிய நிர்வாகிகள் பலரும், தேர்தல் தோல்விக்கு பலமான கூட்டணி இல்லை என்றும், எதிர்காலத்தில் மக்கள் நலக்கூட்டணி கரைசேராது என்றும், எனவே, அக்கூட்டணியைவிட்டு வெளியேற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், வரும் உள்ளாட்சித் தேர்தலில் பலமான கூட்டணி அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.