காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சியை உருவாக்குவது குறித்து ஜி.கே. வாசன் ஆலோசித்து வருகிறார். இறுதி முடிவு எடுக்கப்பட்டதும், இன்று பகல் 12 மணியளவில் ஜி.கே. வாசன் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமலும், ஜி.கே. வாசன் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி துவக்கினால் காங்கிரசுக்கு எந்த பிரச்னையும் இல்லை. உண்மையான தொண்டர்கள் காங்கிரஸில் இருப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தங்கபாலு கூறினார்.
எனினும், ஜி.கே. வாசன், காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றும் தங்கபாலு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.