இதனைத்தொடர்ந்து அவரது ட்விட்டர் கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளது. விசிகவினர் தொடர்ந்து ரிப்போர்ட் அடித்ததால் அந்த கணக்கு முடக்கப்பட்டிருக்கலாம் என சில ஊகங்கள் வலம் வந்தாலும், கணக்கு முடக்கத்திற்கான சரியான காரணங்கள் தெரியவில்லை.
இந்நிலையில் தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்த காயத்ரி ரகுராம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் குறிப்பிட்டிருந்தாவது, சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசிகள் மூலம் மர்மநபர்கள் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்துகின்றனர்.
அதோடு எனது வீட்டிற்கு வெளியிலும் மர்ம நபர்கள் உலாவுவதால் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளார். யாராக இருந்தாலும் நேரில் வாங்க என தேதி, இடம், நேரம் குறித்து கூப்பிட்ட காயத்ரி இப்போது காவல் நிலையத்தில் பாதுகாப்பு வேண்டியுள்ளது கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.