தென்னாப்பிரிக்காவில் விஷவாயு கசிவு- 24 பேர் உயிரிழப்பு

வியாழன், 6 ஜூலை 2023 (14:10 IST)
தென்னாப்பிரிக்கா நாட்டில் குடிசைப் பகுதியில் விஷவாயு கசிவு ஏற்பட்டதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 24 பேர் உயிரிழந்தனர்.

தென்னாப்பிரிக்கா நாட்டில் ஜோகன்னஸ்பர்க் அருகே   போக்ஸ்பர்க்  மாவட்டத்திற்கு அருகில் குடிசைப்பகுதியில் எரிவாயு கசிவு ஏற்பட்டது. இதில், குழந்தைகள் உட்பட குறைந்தது 24 பேர் பலியாகியுள்ளாதாக தகவல் வெளியாகிறது.

இந்த விஷ வாயு  விபத்து  நடைபெற்ற சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், இதுபற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளி ஒரு பகுதியயாக ஒரு சிலிண்டரில் இருந்து  விஷவாயு ஏற்பட்டதாகவும், ஒதுவரை 24 பேர் உயிரிழந்ததுள்ளாதக் கணக்கிட்டுள்ளதாகவும் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்