நாளை முதல் 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Siva

ஞாயிறு, 7 ஏப்ரல் 2024 (11:11 IST)
நாளை முதல் தமிழகத்தில் உள்ள சில பகுதிகளில் ஆறு நாட்கள் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஆங்காங்கே சில பகுதிகளில் மட்டும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இருப்பினும் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே நிலவி வருகிறது என்பதும் ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாளை முதல் தமிழகத்தில் பரவலாக ஆறு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக மிதமான மழை முதல் லேசான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இருப்பினும் இந்த ஆண்டு கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று வானிலை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்