ஜூன் மாதம் முதல் இலவச மளிகைப் பொருட்கள் - முதல்வர் உத்தரவு

வெள்ளி, 28 மே 2021 (19:46 IST)
ஜூன் மதம் முதல் ரேசன் கடைகளில் இலவச மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
.

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில்,நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து இயங்கும் என தமிழக அரசு கூறியுள்ளது.

மேலும்,.  ரேசன் அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதம் முதல் 13 வகையான இலவச மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே மே 24  முதல் மே 31 வரை முழு ஊரடங்கு உள்ள நிலையில் இதை மேலும் ஒரு வாரம் நீட்டித்து இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்களின் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சூழ்நிலையில், ரேசன் அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதம் முதல் 13 வகையான இலவச மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்