போராட்டம் எதிரொலி: ஃபாக்ஸ்கான் நிறுவனம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

புதன், 29 டிசம்பர் 2021 (11:39 IST)
போராட்டம் எதிரொலி: ஃபாக்ஸ்கான் நிறுவனம் எடுத்த அதிரடி நடவடிக்கை!
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸில் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென போராட்டம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில்தான் ஃபாக்ஸ்கான் நிர்வாகம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலை நிர்வாகத்தை மாற்றம் செய்ய முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
 சமீபத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் உணவு சரியில்லை என்றும் உணவை சாப்பிட்ட 8 பெண்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்கள் என்றும் கூறி அந்த ஆலை ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினார் 
 
இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை  அடுத்து நிறுவனத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்பட்டது. இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் உதிரிபாக தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான் நிர்வாகத்தை மாற்றி அமைக்க தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்