முழு ஊரடங்கில் உணவுகளை டெலிவரி செய்ய அனுமதி!

சனி, 8 ஜனவரி 2022 (19:44 IST)
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது நாளை முழு ஊரடங்கும் போது உணவு டெலிவரி வழங்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது
 
உணவு விடுதிகள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் தங்களது சொந்த வாகனத்தில் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு சென்று ஆர்டரின் பெயரில் உணவுப் பொருட்களை விநியோகம் செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது
 
எனவே நாளை உணவு ஆன்லைன் உணவு சப்ளை நிறுவனங்கள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் உணவு டெலிவரி செய்பவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் முகக்கவசம் அணிந்து கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்