மகளை சீரழித்த தந்தை : உடந்தையாக இருந்த தாய் ! பகீர் சம்பவம்

திங்கள், 10 ஜூன் 2019 (15:36 IST)
கோவை மாவட்டம்   பொள்ளாச்சி   அருகே இருக்கும்  கிராமத்தைச் சேர்ந்தவர் ஒரு விவசாயி. இவரது சொந்த ஊர் விழுப்புரம் ஆகும். இவர் தொழில் நிமித்தமாக குடும்பத்துடன் இங்கு வந்து குடியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலையில் இவரது மகள் (14) ஆனைமலை காவல்நிலையத்துக்கு வந்து, தன் தந்தையே தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகக் கூறி அவர் மீது புகார் தெரிவித்தார்.
 
இதைக்கேட்டு அதிர்ந்த போலிஸார், உடனடியாக அவரது தாய், தந்தையிடம் சென்று விசாரித்தனர். 
 
பின்னர்,சிறுமி கூறிய குற்றச்சாட்டின்படி தந்தையே மகளைப் பலாத்காரம் செய்தது உண்மை என தெரிந்தது. ஆனால் சிறுமிக்கு தந்தை பாலியல்  தொல்லை  கொடுப்பது தெரிந்தும் இதுகுறித்து கேட்காமல் இந்தக்கொடுமைக்கு உடந்தைக்கு இருந்ததும் தெரியவந்தது. 
 
இதனையடுத்து தந்தையைக் போலிஸார். கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த தாயும் கைதுசெய்யப்பட்டார்.
 
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்