சென்னை வியாசார்பாடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பப்லு தலைமையிலான ரவுடி கும்பல் ஒன்று இரவு நேரத்தில் பொதுமக்களை தாக்கி வந்தனர். மேலும், அந்த பகுதியில் உள்ள கடைகளில் கட்டாய மாமூல் வசூல் செய்தனர்.
அப்போது, ஹரி என்பவரின் பஞ்சர் கடையில் மாமூல் கேட்டபோது அவர் தர மறுத்துவிட்டார். இதனால், அந்தக் கும்பல் ஹரி மற்றும் அவரது நண்பர்கள் தீபன், ராஜ்குமார் ஆகியோரை வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.