இதற்காக துணை ராணுவம் கூட வரவழைக்கப்பட்டது. மேலும் அவரது மகன் விவேக் வீட்டிலும் சோதனை நடத்தினர். அவரது நண்பர்களிடமும் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பணம், நகைகள், ஆவணங்கள் பல கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து ராம மோகனராவ் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது. இந்நிலையில் இன்று காலை ராம மோகனராவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு என்ன பிரச்சனை என்ற தகவல் இன்னமும் வரவில்லை.