ஒரே நேரத்தில் மீனாட்சி அம்மன் கோவிலில் ஈபிஎஸ் மற்றும் கனிமொழி.. மதுரையில் பரபரப்பு..!

புதன், 30 ஆகஸ்ட் 2023 (11:47 IST)
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஒரே நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகிய இருவரும் வந்ததால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  
 
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வந்து சாமி தரிசனம் செய்தார்.  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி காலில் விழுந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வரவேற்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.
 
  இந்த நிலையில் அதே நேரத்தில் திமுக எம்பி கனிமொழியும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தார். இருப்பினும் இருவரும் நேருக்கு நேர் சந்தித்ததாக இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.  
 
ஆனால் அதே நேரத்தில் ஒரே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க அதிமுக தொண்டர்களும்  கனிமொழி எம்பியை வரவேற்க திமுக தொண்டர்களும் மீனாட்சி அம்மன் கோவில் அருகே கூடி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்