திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வரும் சிவராமன் என்ற ஆறு வயது சிறுவன், நேற்று பள்ளி கழிப்பறையில், ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, ஆசிரியர்கள் போலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவத்தன்று, பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிவராமனுக்கும் 6ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. அதன்பின், அந்த 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், சிவராமன் கழிப்பறைக்கு செல்லும் போது பின்னாலேயே சென்று கல்லால் தலையில் பலமாக அடித்துள்ளான்.