தேனி மாவட்டம், தேனி நகர 11 ஆவது வார்டை சேர்ந்த வி.சரவணன் மின் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அகால மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத்துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
அகால மரணமடைந்த சரவணனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.