நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப்பொருட்கள் தொடர்பாக எழுந்த புகார்களை தொடர்ந்து அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டது.
இதுபற்றி கருத்து தெரிவித்த ஒரு தேர்தல் ஆணைய அதிகாரி “காலியாக உள்ள தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜீன் மாதத்தில் இருந்து கணக்கிட்டால், வருகிற நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலோடு அந்த மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வாய்ப்பு மிகவும் குறைவு. அநேகமாக, அந்த தொகுதிகளுக்கான தேர்தல் தேதி வருகிற அக்டோபர் மாதம் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளது. பின்னர் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற அதிக வாய்ப்புள்ளது” என்று கூறினார்.