தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரது ராஜினாமா குறித்து சத்திய மூர்த்தி பவனில் தொண்டர்களும், தலைவர்களும் பரபரப்பாக பேசி வருகின்றனர்.
தமிழகத்தில், காங்கிரஸ் கட்சியினர் போட்டியிட்ட சட்டசபை தொகுதிகளில் பிரச்சாரம் செய்த குஷ்பு, ஒவ்வொரு வேட்பாளரிடமும் தான் பிரச்சாரத்திற்கு வருவதற்காக தனது உதவியாளர்கள் மூலம் ஒரு லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.