அனைத்து அரசு பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சனி, 29 ஏப்ரல் 2023 (12:45 IST)
அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், உயர்கல்வி வழிகாட்டுதல் குழு அமைக்க கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்த தகவல்களை அந்தந்த பள்ளிகளில் அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வெண்டும் என்றும் கூறியுள்ள பள்ளிக்கல்வித்துறை உயர்கல்வி குறித்த தகவல்களை வீடியோ வடிவிலும் வெளியிட்டுள்ளது.
 
மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் 8 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை ஒவ்வொரு பள்ளிகளிலும் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்