ஆர்கே நகர் தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமியிடம், சசிகலா படத்தை வைத்து ஏன் பிரசாரம் செய்யவில்லை என்று ஓபிஎஸ் அணியினர் கூறி வருகிறார்களே? என கேள்வி எழுப்பினர் செய்தியாளர்கள்.
இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, என்ன வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அதை வைத்து நாங்கள் பிரசாரம் செய்கிறோம் என்றார் சிறிதும் யோசிக்காமல். அதாவது சசிகலா படத்தை போட்டு ஓட்டு கேட்டால் வெற்றி பெற முடியாது என்பதைத்தான் மறைமுகமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே கூறிவிட்டார் என பேசப்படுகிறது.