சேவை மனப்பான்மையில்தான் அதிக காசுக்கு மின்சாரம் வாங்கினோம்! – எடப்பாடியார் விளக்கம்!

புதன், 30 ஜூன் 2021 (13:30 IST)
கடந்த ஆட்சியில் மின்சாரம் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக வெளியான சிஏஜி அறிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் மின்துறைக்கு மின்சாரம் வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் அதிக விலை சொல்லப்பட்ட ஒப்பந்தத்தை மேற்கொண்டதால் மின்துறைக்கு சுமார் ரூ.14,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த இழப்பு குறித்த சிஏஜி அறிக்கைக்கு பதிலளித்துள்ள முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும் என்ற சேவை மனப்பான்மையால் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்பட்டது” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்