பால்பொருட்கள் விலை உயர்வுக்கு டி.டி.வி தினகரன் கண்டனம்

வெள்ளி, 4 மார்ச் 2022 (17:57 IST)
இன்று முதல் ஆவின் பொருட்கள்  விலை உயர்த்தப்படுவதாக தமிழக அர்சு அறிவித்துள்ளது. இதற்கு அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனம் கண்டனம்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில், தயிர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் மக்களை வதைக்கும் வேலையை தி.மு.க அரசு ஆரம்பித்திருக்கிறது. சாமானிய மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வை  உடனடியாக திரும்பப்பெறவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 

தயிர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் மக்களை வதைக்கும் வேலையை தி.மு.க அரசு ஆரம்பித்திருக்கிறது. (1/2) @CMOTamilnadu

— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 4, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்