எஜமான் குடும்பத்தை காப்பாற்ற பாம்புடன் சண்டை போட்ட நாய்: மதுரையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (17:10 IST)
எஜமான் குடும்பத்தை காப்பாற்ற பாம்புடன் சண்டை போட்ட நாய்
தனக்கு சோறு போட்டு காப்பாற்றிய எஜமான் குடும்பத்தின் உயிரை பாம்பிடம் இருந்து பாதுகாக்க தனது உயிரையும் தியாகம் செய்ய முன்வந்த செல்ல நாய் ஒன்றின் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
மதுரையைச் சேர்ந்த ஒருவருக்கு நாய்கள் என்றால் மிகவும் பிரியம். அவர் தாரா என்ற நாயை மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்தார். தாராவும் எஜமான் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தது. தாராவை மீறி யாரும் வீட்டிற்குள் செல்ல முடியாது, அப்படி ஒரு விழிப்போடு தாரா இருந்தது
 
இந்த நிலையில் திடீரென தனது எஜமானின் வீட்டிற்குள் ஒரு கட்டுவிரியன் பாம்பு செல்ல முயல்வதை தாரா பார்த்தது. உடனடியாக தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த கட்டுவிரியன் பாம்புடன் தாரா சண்டை போட்டது. கட்டுவிரியன், தாராவின் உடலில் பல இடங்களில் கொத்திய போதும் வெறி கொண்டு எழுந்த அந்த நாய் கட்டுவிரியன் பாம்பை கடித்தே கொன்றது
 
தாராவின் சத்தத்தை கேட்டு வெளியே வந்த அந்த வீட்டினர் பாம்பால் கடிபட்டு மயக்கத்தில் இருக்கும் நாயை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அருகில் உள்ள விலங்குகள் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது தாராவின் உடல் விஷம் ஏறி கோமாவுக்கு சென்றுவிட்டதாகவும் முடிந்த அளவு அதன் உயிரை காப்பாற்ற முயற்சித்து வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர் இதனால் அந்த குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்