அரசியலுக்கு வந்துதான் சேவை செய்யனுமா? நடிகர் ராகவா லாரன்ஸ் டுவீட்

திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (16:53 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஆசிரமம் நடத்தி வரும் நடிகர் ராகவாலாரன்ஸ், தனது டுவிட்டர் இன்று அரசியல் என்ற தலைப்பிட்டு ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், நான் அரசியலுக்கு வந்து ஒருபதவி பெற்று, ஏழை மக்களுக்கு உதவி செய்வதாகச் சொல்லி நேரத்தை வீணடிப்பதைவிட, அமைதியாக இருந்து எந்த எதிர்ப்பார்புமின்றி சமூகத்திற்கு சேவை செய்தையே நல்லது என நினைக்கிறேன்.

இப்போது என்னால் 200 குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அரசியலுக்கு வரலாமலேயே இதை செய்யலாம். சேவையே கடவுள் எனப் பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்