காஞ்சி குலுங்கட்டும், காலம் கனியட்டும், ஆட்சி மாறட்டும் என்று தனது தொண்டர்களுக்கு விஜயகாந்த் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது தொண்டர்களுக்கு, எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
அந்த வரிசையில் வரும் 20 ஆம் தேதி காஞ்சிபுரம் வேடல் என்ற இடத்தில் துணிந்திடு, தவறுகளை களைந்திடு, புதிய மாற்றத்துக்கான ஆரம்பம் என்ற லட்சியத்தோடு திருப்புமுனை மாநாடாக நடைபெற உள்ளது.
எனவே, காஞ்சி குலுங்கட்டும், காலம் கனியட்டும், ஆட்சி மாறட்டும் நாம் அனைவரும் ஒன்றிணைவோம், வென்றிடுவோம் என அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாட்டில் தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவிக்க உள்ளார்.