5 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த தீபாவளி ரயில் டிக்கெட்

புதன், 29 ஜூன் 2016 (09:48 IST)
பண்டிகைகள் வந்து விட்டாலே மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் இந்தியாவின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி வந்தால் போதும் ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.


 
 
பெரும்பாலும் நீண்ட தூர பயணங்களுக்கு மக்கள் ரயிலை தேர்ந்தெடுப்பது தான் வழக்கம். இந்நிலையில், தீபாவளியையொட்டி வரும் நவம்பர் 27-ஆம் தேதி சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.
 
இந்த முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய 5 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. சென்னை எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மக்கள் நேரடியாக  முன்பதிவு செய்வதற்காக வந்திருந்தனர்.
 
ரயில் நிலையங்களில் நேரடியாக வந்து முன்பதிவு செய்ய குறைந்த பயணிகளே வந்திருந்தனர். ஆனால் பெரும்பாலான பயணிகள் ஆன்லைன் மூலமே டிக்கெட் முன்பதிவு செய்தனர். இதனால் 5 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டும் விற்று தீர்ந்தன.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்