வைகாசி பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளில், ஹம்ஸ வாகனத்தில் பறந்து வரதராஜ பெருமாள் அருள் புரிந்தார். அந்த நேரத்தில், மண்டகபடி கண்டருளியபோது வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்கு இடையே மந்திர புஷ்பம் பாடுவது குறித்து வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டது.
கடந்த வருடமும், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் மண்டகபடி நிகழ்ச்சியில் பிரபந்தம் பாடும் போது, வடகலை மற்றும் தென்கலை பிரிவினர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.