ஐபிஎல் போராட்டத்தில் கைதான இயக்குனர் கவுதமன் விடுதலை

சனி, 14 ஜூலை 2018 (09:30 IST)
சமீபத்தில் சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இயக்குனர் கவுதமன். இவர் கடந்த சில நாட்களாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஜாமீன் கிடைத்ததால் விடுதலை ஆனார்
 
தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கவுதமன் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு சென்னை ஐகோர்ட் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து சென்னை புழல் சிறையில்  இருந்து இயக்குநர்  கவுதமன் விடுதலை ஆனார்
 
இனி மேல் அரசுக்கு எதிராக எந்த வித போராட்டங்களிலும் காவல்துறை அனுமதி இல்லாமல் கலந்து கொள்ள மாட்டேன் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் இயக்குனர் கவுதமன் எழுத்துபூர்வ உறுதி அளித்ததை சென்னை ஐகோர்ட் ஏற்றுக்கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்