அம்மாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகம்: ஜெ இல்ல சோதனை குறித்து தினகரன்

வெள்ளி, 17 நவம்பர் 2017 (23:05 IST)
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள பூங்குன்றனின் அறையில் கடந்த சில நிமிடங்களாக வருமான வரித்துறையினர் அதிரடி செய்து வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் போயஸ் கார்டன் இல்ல சோதனை குறித்து டிடிவி தினகரன் ஆவேசமாக கருத்து கூறியுள்ளார்.


 


தினகரன் தனது டுவிட்டரில் கூறியதாவது: போயஸ் கார்டனில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்கு காரணம் எதுவாக இருந்தாலும், இது அம்மாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகம். இந்த துரோகத்தின் பின்னணியில் எடப்பாடியும் பன்னீர்செல்வமும்தான் இருக்கிறார்கள்.

அதேபோல் தினகரன் ஆதரவாளர் கலைராஜன் கூறியபோது, 'ஜெயலலிதா பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது என்று கூறியுள்ளார். ஆனால் இந்த சோதனை குறித்து முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் இருந்து எந்தவித கருத்துக்களும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்