இந்த குழந்தைக்கு கடந்த இரு நாட்களாக கடும் காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பிரகதாவை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். டாக்டர்கள், அந்த குழந்தைக்கு மருத்துவ சோதனை செய்த போது, அந்த குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் தாக்கி இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இந்த நிலையில், குழந்தை பிரகதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள்.