சமீபத்தில், சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சில தொண்டர்கள் சென்றனர். அவர்களின் கோஷங்களை கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த தீபா, வீட்டின் பால்கனியில் இருந்து அவர்களை சந்தித்தார். அவரை பார்த்த மகிழ்ச்சியில், உற்சாகமான தொண்டர்கள் உணர்ச்சி மிகுதியில் அவரை அரசியலுக்கு வரும்படி அழைத்தனர்.