திருமழிசை காய்கறி மார்க்கெட்…தினமும் வீணாகும் கய்கறிகள் – காரணம் என்ன?

புதன், 27 மே 2020 (07:23 IST)
திருமழிசை சந்தையில் காயகறிகளை சேமித்து வைக்க கிடங்கு வசதி இல்லாததால் தினசரி காய்கறிகள் வீணாவதாகப் புகார் எழுந்துள்ளது.

கொரோனா ஊரடங்கின் போதும் இயங்கிய கோயம்பேடு காய்கறி சந்தையில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து சமீபத்தில் கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டு திருமழிசையில் தற்காலிகமாக கடைகள் அமைக்கப்பட்டன.

அங்கு காய்கறி சந்தை அமைக்கப்பட்டதில் இருந்து காய்கறி வியாபாரம் மந்தமாகவே உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அங்கு சேமிப்புக் கிடங்கு வசதியும் இல்லாததால் தினமும் 2 லட்சம் கிலோ காய்கறிகள் வீணாவதாக சொல்லப்படுகிறது. திருமண விழாக்கள் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் எதுவும் ஊரடங்கு காரணமாக தற்போது நடைபெறாததால் காய்கறிகள் தேவை குறைந்துள்ளது. அதனால் வியாபாரமும் மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்