’’சொத்துக் குவிப்பு வழக்கு ‘...’சுதாகரனை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு

வியாழன், 17 டிசம்பர் 2020 (22:56 IST)
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் அக்ரஹார சிறையில் தண்டனை பெற்று வரும் ஜெயலலிதாவின் உறவினர் சுதாகரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்குத்தொடர்பாக சசிகலா அவரது உறவினராக இளவரசி, சுதாகரன் ஆகிய  மூவரும் வழக்கில் பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு அவர்களுகு 4 ஆண்டு காலத் தண்டனை விதிக்கப்பட்டது.

இவர்களுக்கான தண்டனை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாடம் 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே இவ்வழக்கின் 4 வது குற்றவாளி சுதாகரன் தன்னை முன்கூட்டி விடுதலை செய்யவேண்டுமென நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

எனவே நீதிமன்றம் அவரது கோரிக்கையை ஏற்று விடுதலை செய்ய உத்தரவிட்டது. ஆனால் இன்னும் ஓரிரு நாட்களில் அவருக்கு விதிக்கப்பட்ட ரூ. 10 கோடி அபராதத் தொகைச் செலுத்தினால்தான் அவர் விடுவிக்கப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்