பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், ஸ்ரீரங்கம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் முன்னேற்றம் எதுவும் இல்லாததால், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனால், வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிடக்கோரி ராமஜெயத்தின் மனைவி லதா, உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின்போது சிபிசிஐடி போலீசார் குற்றவாளிகளை பிடிக்கபலமுறை அவகாசம் கேட்டு வந்தனர். எனினும் இப்போது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், நேற்று புதனன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மேலும் 2 மாதம் அவகாசம் கேட்கப்பட்டது. அப்போது அனுமதி வழங்க மறுத்துவிட்ட நீதிபதி தேவதாஸ், ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கெடு விதித்து உத்தரவிட்டுள்ளார்.