பின்னர், மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி வந்த கார் மீது கண் இமைக்கும் நேரத்திற்குள் வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி இருவரும் பலியாகினர்.
ஆனால், இந்த சம்பவத்தை கொளத்தூர் மணி மறுத்துள்ளார். அவர்கள் மீது இன்னொரு வண்டி மோதி, இருவரும் தூக்கிவீசப்பட்டு தங்களது கார் மீது விழுந்து உயிரிழந்தனர் என கொளத்தூர் மணி விளக்கம் அளித்திருக்கிறார்.