88 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை - அமைச்சர் விஜயபாஸ்கர்

செவ்வாய், 9 ஜூன் 2020 (17:56 IST)
சென்னை கிண்டியில் கிங் பரிசோதனை மையத்தில் 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்றும் 88 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் எழும்பூர் மருத்துவமனையில் புதியாக 3200 படுக்கைகள் ஏற்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 
இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளதாவது :

2020 ஆம் ஆண்டு வரை கொரோனா நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா இல்லாத சென்னையை உருவாக்க அனைத்து மண்டலங்களில் அமைச்சர்கள் குழு ஆய்வு செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்