ஒருவாரத்திற்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் – ராதாகிருஷ்ணன்

ஞாயிறு, 3 மே 2020 (11:59 IST)
தமிழகத்தில் உள்ள தன்னார்வலர்கள் அனைவரும் தாமாக முன்வந்து 10 நாட்களுக்கு ஒருமுறை டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்  என கொரோனா தடுப்புப்பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

கொரோனா நமக்கு  வராது என அலட்சியத்துடன் யாரும் இருக்கக்கூடாது ;சென்னையில் மூச்சுத்திணறல், காய்ச்சல், சளி, இருமல் இருப்பவர்கள் தாமாக பரிசோதனைக்கு முன்வர வேண்டும்  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் ஒருவாரத்திற்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும். அதற்காக  அச்சப்படத் தேவையில்லை. கடைகளில் பணியாற்றுபவர்களையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த ஏற்பாடு *செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வீடுகளுக்கு பொருட்கள் டெலிவரி செய்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்