சென்னைக்கு நவம்பர் மாசம் இருக்கு ஆப்பு!

வெள்ளி, 9 அக்டோபர் 2020 (10:43 IST)
நவம்பர் மாதத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை. 
 
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 6,40, 943 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 5,86, 454 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10052 ஆக அதிகரித்துள்ளது.
 
சென்னையில் இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,78,108 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் பரிசோதனை விகிதம் 3 மடங்குக்கு மேல் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதனையில் 16 லட்சத்தை நெருங்கி உள்ளோம்.
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 5% கீழ் குறைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 9% இருக்கும் தொற்று விகிதம், இந்த மாத இறுதிக்குள் 7 முதல் 6% குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் நவம்பர் மாதத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என எச்சரித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்