தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

புதன், 29 ஜூலை 2015 (07:41 IST)
வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னையில்  மாலை மற்றும் இரவு நேரங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழைபெய்து வருகிறது. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
 
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "வளிமண்டல மேல் அடுக்கில் உருவாகியுள்ள காற்று சுழற்சி தமிழக-புதுச்சேரி கடல் பகுதியில் நிலை கொண்டது.
 
பின்னர் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டு நகர்ந்து வருகிறது. அத்துடன், வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களில் மழை பெய்யும்.
 
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உண்டு". என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்