வேலூர் மாவட்டம் அரக்கோணம் பழனிபேட்டை குருசாமி வீதியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பரது மகள் ஸ்மிர்த்தி(வயது 19). இவர் ஈரோடு காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பி.இ. படித்து வரும் நான், ஜிம் பயிற்சியாளரும், ஓட்டல் ஊழியருமான வெங்கடேஷ் என்பவரை காதலித்தேன். எங்கள் காதல் விவகாரம் பெற்றோருக்குத் தெரிய வந்ததை அடுத்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.