கோவையில் வெடித்து சிதறிய எரிவாயு குழாய்: பொதுமக்கள் அதிர்ச்சி!

வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (19:30 IST)
கோவையில் வெடித்து சிதறிய எரிவாயு குழாய்: பொதுமக்கள் அதிர்ச்சி!
கோவையில் திடீரென எரிவாயு குழாய் வெடித்து சிதறியதால் அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
மத்திய அரசு நிறுவனத்தின் சார்பில் 24 மணி நேர எரிவாயு குழாய் பதிக்கும் பணி கோவையில் நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென எரிவாயு குழாய்கள் வெடித்து சிதறியது 
 
சோதனைக்காக எரிவாயு செலுத்தப்பட்ட நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடியதாகவும் இதுவரை வந்த தகவலின் படி பொதுமக்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் குழாய் பதிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்