நீதி வென்றது.. ராகுல் வழக்கின் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ட்விட்..!

வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (15:13 IST)
ராகுல் காந்தி அவதூறு வழக்கில் அவருக்கு கொடுக்கப்பட்ட இரண்டு ஆண்டு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதனை அடுத்து நீதி வென்றது என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 
 
மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு தண்டனை கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து அவரது எம்பி பறிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி உள்ளது. 
 
இதனை அடுத்து ராகுல் காந்தி எம்பியாக தொடர்வார் என்று  தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் அன்பு சகோதரர் ராகுல் காந்தியை வயநாடு தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ராகுல் காந்தி வழக்கில் நீதி வென்று உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் மட்ட பிள்ளை
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்